Thursday 29 September 2011

அன்பு டமில் ரத்தங்களுக்கு...ஒரு நிமிடம்

நாம் தமிழர்.தமிழ் என்ற பல்லாண்டு மொழியை கொண்டவர்கள்.
வீரமும் ஈரமும் உள்ளவர்கள் என்று பள்ளிப்புத்தகங்களில் படித்திருக்கிறோம்.
அது தவிரவும் நமக்கு பல பெருமைகள்.
  1. சினிமா நடிகனுக்கு கட் அவுட்,பாலாபிசஷேகம் செய்வது.
  2. வந்தேரிகளை வாயெல்லாம் பல்லாக வரவேற்பது.
  3. ஈழத்தில் கொத்துக்கொத்தாக செத்தபோது மசாலாபடங்கலும்,சீரியலுமாக கண்ணீர் விட்டது.
  4. ஒரு போராட்டம் என்றால் பல குரூப்பாக பிரிந்து போராடுவது.
இதெல்லாம் நம் தமிலர் அடையாளம்.

இப்போது விஷயம் என்னவென்றால்,

செப்டம்பர் 11,2001 தமிழ்நாடு தென்மண்டல போலீஸ் பொருக்கிகள் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு வந்த தேவேந்திர குலத்தைச்சேர்ந்த   3 பேரை சுட்டும்,4 பேரை சாதி வெறியில் அடித்தே கொன்றது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்.தெரியாமலும் இருக்கலாம்.மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன.நடந்தது அப்பட்டமான படுகொலைகள்.

change.org தளத்தில் உள்ள கோரிக்கையை படித்து உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.

http://www.change.org/petitions/dismiss-and-convict-police-who-executed-paramakkudi-massacre

இதன் மூலம் உங்கள் குரலை உரத்து பதிவு செய்யுங்கள்.இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள்.பிளாக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதில் உடன்பாடில்லையென்றால்,மெலிதாக புன்னகைத்துவிட்டு இந்த தளத்தை மூடிவிட்டு,உங்கள்
சொந்த வேலையை பாருங்கள்.அதிகபட்சம் போனால் ஊழலை எதிர்த்து மெழுகுவர்த்தி கொளுத்துங்கள்.உங்கள் சகோதரன்,சொந்தக்காரன் இதே போலீசால் சுட்டுக்கொல்லப்படும்போது போரடிக்கொள்ளலாம்.No Hassle !

அதுவரை
வால்க டமில்.வால்க டமிலர்.

No comments:

Post a Comment